×

குஜராத்தில் ரூ.2,300 கோடி ஹவாலா மோசடி சீன நபருக்கு வலை

அகமதாபாத்: குஜராத்தில் கால்பந்து பெட்டிங் ஆப் மூலமாக பலரையும் ஏமாற்றியதாக சீன நாட்டை சேர்ந்த வு சோம்போ மீது சிஐடி போலீசில் புகார் தரப்பட்டது. விசாரணையில் 1,175 பேரிடம் சோம்போ தனது ஆப் மூலம் ரூ.3.5 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் தலைமறைவான சோம்போவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குஜராத்தில் சமீபத்தில் ரூ.2,300 கோடி ஹவாலா மோசடி பரிவர்த்தனை தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கிலும் சோம்போவுக்கு தொடர்பிருப்பதாக சிஐடி போலீசார் கண்டறிந்துள்ளனர். அவரை கைது செய்ய அமலாக்கத்துறையின் உதவியும் நாடப்பட்டுள்ளது.

The post குஜராத்தில் ரூ.2,300 கோடி ஹவாலா மோசடி சீன நபருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Ahmedabad ,Wu Chombo ,Dinakaran ,
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...